முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை
By அரியலூர்
First Published : 26 July 2016 06:52 AM IST
அரியலூர் மாவட்டம், புங்கங்குழி ஊராட்சி, ஆதனூர் தெற்கு காலனி தெரு மக்கள், தங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்க கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
அரியலூர் மாவட்டம் பூங்கங்குழி ஊராட்சி, ஆதனூர் கிராமம், தெற்கு காலனித் தெருவில் கடந்த சில மாதங்களாக குழாய்களில் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.
குடிநீர் கேட்டு பல முறை ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய நிர்வாகத்திடமும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மேலும், உடைந்துள்ள குழாயும் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது.
இதனால் கடந்த 2 மாதங்களாக குடிக்க தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம்.
எனவே, மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Nandri : dinamani



0 comments:
Post a Comment